Poorin Padippinaikal

போரின் படிப்பினைகள்

Description

போரின் படிப்பினைகள்

இலங்கை உள்நாட்டுப் போரின் செலவுகளும் தாக்கங்களும் பொருளாதார இழப்புகளும்

போரின் படிப்பினைகள்’ என்ற தலைப்பில் ஏககாலத்தில் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் இம்முயற்சி இருபது வருடங்களுக்கு மேலாக அருட்டிக் கொண்டிருந்த செயல்திட்டத்தின் உச்சமாக நிற்கிறது. இதற்கு உந்து சக்தியாக இருந்தது எளிமையான பின்வரும் கேள்வியே: “இதற்கு எங்களால் எவ்வாறு வர முடிந்தது?” இந்தக் கேள்வி, 1987 ஜூலையில் ஒரு வெப்பமான பின்னேரத்தில் கொழும்பில் நடந்த கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்டது. இந்தக் கேள்வியை இலங்கை மக்கள் இன்று போல் அன்றும் கேட்டதற்குரிய காரணம் தமது அழகான தீவு, வளர்ந்து வரும் ‘வெற்றிக் கதையை’ தன்னகத்தே கொண்டிருந்த அழகான நாடு, மிகப் பயங்கரமான நீண்டு கொண்டு போகும் மோதலால் அழிவுக்குள்ளாவதற்கு உதாரணமாக அடிக்கடி காட்டப்படுவதைக் கண்டதே.