Poorin Padippinaikal 3: Nampikkayin Malarcchi

போரின் படிப்பினைகள் 3

நம்பிக்கையின் மலர்ச்சி

Description

போரின் படிப்பினைகள் 3

நம்பிக்கையின் மலர்ச்சி

ஜோன் றிச்சார்ட்சன் ஆங்கிலத்தில் எழுதிய ‘நஞ்சூட்டப்பட்ட சுவர்க்கம்’ என்ற தலைப்புடைய நூலின் 6ஆம், 7ஆம், 8ஆம் அத்தியாயங்களின் மொழிபெயர்ப்பாக இந்நூல் அமைந்துள்ளது. கண்டியிலுள்ள இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனம், 2005ம் ஆண்டில் ஆங்கில நூலைப் பிரசுரித்தது. (Paradise Poisoned: Learning about conflict, Terrorism and development from Sri Lanka’s civil wars, International Centre for Ethnic Studies, Kandy, 2005).  ஆங்கில நூலை எட்டுப் பகுதிகளாகப் பிரித்து தமிழிலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கும் திட்டத்தின் கீழ் 2008ம் ஆண்டில் முதலாவது நூலும், 2011 ஜனவரியில் இரண்டாவது நூலும் வெளிவந்தன. இப்பிரசுரம் இத்தொடரில் மூன்றாவதாகும். ஓப்பீட்டளவில் அமைதியான ‘நம்பிக்கையின் மலர்ச்சி’க் காலத்தின் (1948-1965) அரசியல் இந்நூலில் ஆழமாகவும் விரிவாகவும் ஆராயப்படுகிறது.